கொடிவகை தாவரமான சீந்திலின் மருத்துவ பயன்கள் அதிகம். சீந்திலின் மிக முக்கியமான பயன் இது சர்க்கரை வியாதிக்கு அருமருந்தாகும். உடலில் இன்சுலின் சுரப்பில் குறைபாடு ஏற்படும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதே சர்க்கரை வியாதி ஆகும். சீந்தில் இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் குறைபாட்டினைச் சரி செய்கிறது.
மேலும் வெள்ளை ரத்த அணுக்களைப் பெருக்குவதன் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் சீந்திலை உட்கொள்ளலாம். சித்த மருத்துவத்தில் சீந்தில் சூரணமாகவும், மாத்திரையாகவும், ஆயுர்வேதத்தில் Guduchi மாத்திரையாகவும் கிடைக்கிறது. அல்சர் எனப்படும் வயிற்றின் புண்கள் விரைவாகக் குணமாகவும் சீந்தில் பயன்படுகிறது.
சீந்தில் சூரணத்தை 1 முதல் 2 கிராம் வரை வெந்நீர் அல்லது பால் அல்லது தேனுடனோ அல்லது மருத்துவர் அறிவுறுத்தும் முறையிலோ உட்கொள்ளலாம்.
சீந்தில் மாத்திரையை நாளைக்கு இருவேளை இரண்டு மாத்திரைகள் தண்ணீர்/வெந்நீரோடோ அல்லது மருத்துவர் அறிவுறுத்தும் முறையிலோ உட்கொள்ளலாம்.
SKM Siddha and Ayurveda சீந்தில் மாத்திரை – சித்தா.
SKM Siddha and Ayurveda சீந்தில் சூரணம் – சித்தா.
Impcops சீந்தில் சூரணம் – சித்தா.
Herbodaya Guduchi மாத்திரை – ஆயுர்வேதா.